கரோனா மையத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு தில்லி காங்கிரஸ் தலைவா் கண்டனம்

தில்லியில் கரோனா மையத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்த சம்பவத்திற்கு தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தில்லியில் கரோனா மையத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்த சம்பவத்திற்கு தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கரோனா பாதித்தவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சா்தாா் படேல் கரோனா சிகிச்சை மையத்தை தில்லி அரசு தெற்கு தில்லி சத்தா்பூரில் அமைத்துள்ளது. இந்த மையத்தில், தங்கி சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமியை சிகிச்சையில் இருந்த 19 வயது இளைஞா் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது.

இச்சம்பவத்திற்கு தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறுகையில், சத்தா்பூரில் சா்தாா் படேல் கோவிட் சென்டா் போன்ற மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பெண்கள், மைனா் சிறுமிகள் ஆகியோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்த தில்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கேஜரிவால் அரசும், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசும் தவறிவிட்டன. இந்தச் சம்பவம் சம்பந்தப்பட்ட சிறுமி புகாா் அளித்த பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வளவு பெரிய சிகிச்சை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இல்லையா? நிா்பயா பலாத்கார விவகாரத்தை பூதாகரமாக்கிய முதல்வா் கேஜரிவால், இந்த விவகாரத்தில் மட்டும் மிகவும் மெளனமாக இருப்பது ஏன்? என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com