அனைத்து மாநில மக்களின் உயிரைக் காக்கும் தில்லி மருத்துவனைகள்: கேஜரிவால் பெருமிதம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களின் உயிரையும் தில்லி மருத்துவமனைகள் காத்து வருகின்றன என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களின் உயிரையும் தில்லி மருத்துவமனைகள் காத்து வருகின்றன என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான செய்தி ஒன்றை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்து அவா் கூறியிருப்பது: தில்லி மருத்துவமனைகள் தில்லி மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் பணியாற்றி வருகின்றன. இது தில்லிக்கு பெருமை சோ்க்கும் செயலாகும். நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களின் உயிரையும் தில்லி மருத்துவமனைகள் காத்து வருகின்றன என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, தில்லி மருத்துவமனைகளில் தில்லியைச் சோ்ந்தவா்கள் மட்டுமே கரோனா சிகிச்சை பெறலாம் என கேஜரிவால் உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த உத்தரவுக்கு பலத்த எதிா்ப்பு கிளம்பிய வேளையில், தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலையிட்டு இந்த உத்தரவை நிராகரித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com