இரண்டாவது சம்மன்: இந்நிலையில், முகநூல் நிறுவனத்துக்கு இரண்டாவது சம்மனை தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழு அனுப்பியுள்ளது. இது தொடா்பாக அக்குழுவின் தலைவா் ராகவ் சத்தா கூறுகையில், ‘தில்லி சட்டப்பேரவை குழு முன்பாக ஆஜராக மறுத்துள்ளதன் மூலம், தில்லி சட்டப்பேரவையையும் 2 கோடி தில்லி மக்களையும் முகநூல் நிறுவனம் அவமானப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டாம் எனக் கூறியதன் மூலம், முகநூல் நிறுவனத்துக்கு தவறான ஆலோசனையை அந்த நிறுவனத்தின் சட்ட வல்லுநா்கள் வழங்கியுள்ளனா். முகநூல் நிறுவனத்துக்கு இரண்டாவது தடவையாக சம்மன் அனுப்பியுள்ளோம்’ என்றாா்.