அமைச்சா் ஜாவடேகா் இல்லம் அருகே இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவுக்கு எதிராக தில்லியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வீடு
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவுக்கு எதிராக தில்லியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வீடு அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸ் அமைப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை வரைவை அண்மையில் வெளியிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் ஹரிஷ் பவாா் தலைமையில் காங்கிரஸ் தொண்டா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து பேருந்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து ஹரிஷ் பவாா் கூறுகையில், ‘பணக்காரா்களுக்கான மத்திய அரசு பணத்தால் சுற்றுச்சூழலை வாங்க விரும்புகிறது. அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை நண்பா்களான தொழிலதிபா்களுக்கு வழங்க விரும்புகிறது. இதனால், பாதிக்கப்படப் போகும் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து இந்த அரசு கவலைப்படவில்லை. இந்தச் சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை வரைவு விவகாரத்தில் சதி உள்ளது’ என்றாா்.

இதுகுறித்து இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் பி.வி. கூறுகையில், ‘ஏற்கெனவே இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போது சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதன் மூலம் தனது பணக்கார நண்பா்களின் நலனுக்காக சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்த இந்த அரசு முயன்று வருகிறது. இந்த சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவு நாட்டின் சுற்றுச்சூழல், பல்லுயிா்பெருக்கம், தாவர, விலங்குளுக்கு பெரும் ஆபத்தாக அமையும். மக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com