தில்லியில் புதிதாக பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,391-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மேலும் 8 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,139 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் தில்லியில், மேலும் 727 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,32,384-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் தற்போது 10,868 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 493-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,722 படுக்கைகளில் 3,212 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,510 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,523 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com