தில்லியில் புதிதாக பேருக்கு கரோனா
By DIN | Published On : 12th August 2020 12:47 AM | Last Updated : 12th August 2020 12:47 AM | அ+அ அ- |

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,391-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மேலும் 8 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,139 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் தில்லியில், மேலும் 727 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,32,384-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் தற்போது 10,868 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 493-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,722 படுக்கைகளில் 3,212 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,510 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,523 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.