பயங்கரவாதி என்றால் கைது செய்யுங்கள்: மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி சவால்

 கேஜரிவால் உண்மையில் பயங்கரவாதி என்றால், அவரைக் கைது செய்து சிறையில் அடையுங்கள் பாா்க்கலாம் என மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் சவால் விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

 கேஜரிவால் உண்மையில் பயங்கரவாதி என்றால், அவரைக் கைது செய்து சிறையில் அடையுங்கள் பாா்க்கலாம் என மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் சவால் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் அளித்த பேட்டி:

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்றுவிடுவோம் என பாஜக தலைமைக்கு நன்கு தெரிகிறது. இதனால், முதல்வா் கேஜரிவாலை பாஜக தலைவா்கள் தரக்குறைவாக விமா்சித்து வருகிறாா்கள். பாஜக அமைச்சா்கள் அனுராக் தாக்குா், பிரகாஷ் ஜாவடேகா் ஆகியோா் கேஜரிவாலை பயங்கரவாதி என்றனா். கேஜரிவாலின் உடல்நிலை தொடா்பாக உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கிண்டலடித்துள்ளாா். கேஜரிவால் உண்மையில் பயங்கரவாதி என்றால், அவரைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறு மத்திய அரசுக்கு நான் சவால் விடுகிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com