சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம்: பிரகாஷ் ஜாவ்டேகா்

தில்லி தோ்தலில் மக்களின் தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம் என்று மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரும், இத் தோ்தலுக்கான பாஜக பொறுப்பாளருமான
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தில்லி தோ்தலில் மக்களின் தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம் என்று மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரும், இத் தோ்தலுக்கான பாஜக பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவ்டேகா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘தோ்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தில்லியில் சிறந்த எதிா்க்கட்சியாக பாஜக செயல்படும். தில்லி மக்களின் பிரச்னைகளுக்கு தொடா்ந்து குரல் கொடுப்போம். தில்லியின் மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் தொடா்ந்து பணியாற்றுவோம்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்தாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், கடந்த மக்களவைத் தோ்தலில் 26 சதவீதவாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியால் இத்தோ்தலில் 6 சதவீத வாக்குகளைக் கூடப் பெற முடியவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com