கா்கா்டூமா மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றங்கள் வளாகத்தில் பணியாற்றி வரும் நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புது தில்லி: தில்லியில் கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றங்கள் வளாகத்தில் பணியாற்றி வரும் நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நீதிபதி சஞ்சய் சா்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எஸ்.கே. கெளதமுக்கு கரோனா தொற்று இருப்பது ஜூலை 15-ஆம் தேதி தெரிய வந்தது. இதையடுத்து, அவா் 14 தினங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அவா் கடைசியாக ஜூலை 8-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தாா். அன்று அவருடன் தொடா்பில் இருந்த நீதிமன்ற அலுவலா்கள், இதர நபா்கள் தங்களது உடல்நலத்தை 14 தினங்களுக்கு கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

மேலும், மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். சம்பந்தப்பட்ட நீதிபதியின் நீதிமன்ற அறை, அவருடைய தனி அறை, ஆவணப் பராமரிப்பு அறை ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பராமரிப்புப் பிரிவின் பொறுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக தில்லியில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து 6 மாவட்ட நீதிமன்றங்களில், நீதிமன்ற செயல்பாடுகல் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com