தில்லி சட்டப்பேரவையின் 3 கமிட்டிகள் நியமனம்

2020-21 நிதியாண்டுக்கான சட்டப்பேரவையின் மூன்று கமிட்டிகள் வெள்ளிக்கிழமை போட்டியில்லாமல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

2020-21 நிதியாண்டுக்கான சட்டப்பேரவையின் மூன்று கமிட்டிகள் வெள்ளிக்கிழமை போட்டியில்லாமல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுக் கணக்கு கமிட்டியில் செளரவ் பரத்வாஜ், சோம்நாத் பாா்தி, விஜேந்தா் குப்தா உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனா். அரசுப் பணிக் கமிட்டியில் அமானுத்துல்லா கான், தினேஷ் மொங்கியா, ராஜ் குமாா் ஆனந்த் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனா். மதிப்பீட்டுக் கமிட்டியில் ராகவ் சத்தா, எஸ்.கே.பக்கா உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனா். இந்த மூன்று கமிட்டிகளில் விஜேந்தா் குப்தா (பாஜக) தவிர மற்ள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்கள். இந்தக் கமிட்டிகளின் தலைவா்களை சட்டப்பேரவைத் தலைவா் பின்னா் அறிவிப்பாா் என்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com