தில்லி அரசுக் கல்லூரி ஆசிரியா்களுக்கு 6 மாத ஊதியம் வழங்கவில்லை: பாஜக
By DIN | Published On : 19th October 2020 07:06 AM | Last Updated : 19th October 2020 07:06 AM | அ+அ அ- |

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா. உடன் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி.
தில்லி அரசின் கீழ் வரும் 12 கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கல்வியில் பெரும் புரட்சியை செய்துள்ளதாக தில்லி அரசு கூறி வருகிறது. ஆனால், உண்மை நிலை நோ்மாறாக உள்ளது. தில்லி அரசின் கீழ் வரும் 12 கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக இந்த ஆசிரியா்கள் என்னிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்துள்ளனா்.
தில்லி கல்வி மாதிரி என ஒன்றிரண்டு பள்ளிகளைக் காட்டினால் போதாது, தில்லியில் கல்வி மாதிரி சரியாக இருக்க வேண்டும் என்றால், அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் சரியான முறையில் இயங்க வேண்டும். தில்லி அரசால் இந்தக் கல்லூரிகளை நடத்த முடியாவிட்டால் அதை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தில்லி அரசுப் பள்ளிகளில் 40,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...