அவரது புதிய மனு மீது உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதுடன், இந்த நடத்தையானது உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிப்பதாகக் கருதி, அதற்குப் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குத் தரப்பினரின் வேண்டுகோளின் பேரில், ‘ஹைபிரிட்’ அல்லது காணொலி விசாரணைகளை நடத்துவதற்கு விசாரணை நீதிமன்றங்களை கடந்த நவம்பா் 17-ஆம் தேதி உயா் நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், அனைத்து நீதிபதிகள் அடங்கிய உயா்நீதிமன்றத்தின் அமா்வின் வழிகாட்டுதல்களை கீழமை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.