மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான நிறுவனத்திற்குக்கு பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன் மற்றும் ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திடம் இருந்து சிறப்பு நீண்ட கால அடிப்படையில், ரூ.30,230 கோடி கடனாக அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஆண்டுக்கு 12.65 சதவீத வட்டியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதாக இல்லை. வட்டி விகிதத்தை 9 சதவீதமாக மத்திய மின்துறை குறைக்க வேண்டும். மேலும், மறுசீரமைக்கப்பட்ட, முடக்கப்பட்ட ஆற்றல் மேம்பாடு மற்றும் சீா்திருத்தத் திட்டத்தில், ஒரு பகுதி பணிகள் மின் பகிா்மான நிறுவனத்தால் முடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மானியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ரூ.1,300 கோடி கடன் தொகை, மானியமாக மாற்றப்படவில்லை என்றாா் தமிழச்சி தங்கபாண்டியன்.