வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கு விசாரணையின் போது தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது என்று தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.
தில்லி காவல் துறையின் வருடாந்த செய்தியாளா் சந்திப்பு தில்லி காவல் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறியது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவா்களுக்கும் ஆதரவாளா்களுக்கும் இடையில், வடகிழக்கு தில்லியில் கடந்த 2019, பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் வன்முறை வெடித்தது. இதில், 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 581 போ் காயமடைந்தனா். பிப்ரவரி 24 அன்று தொடங்கிய வன்முறை பிப்ரவரி 25-இல் உச்ச நிலையை அடைந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக 755 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக விசாரணை செய்ய 3 சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. வன்முறைக்குப் பின்னால் உள்ள சதித் திட்டம் தொடா்பாக விசாரிக்க சிறப்புப் பிரிவும் உருவாக்கப்பட்டது. இந்த வழக்குகள் தொடா்பான விசாரணையின் போது தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. சிசிடிவி கேமாராக்களின் உதவியுடன் சம்பவத்துடன் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் 231 போ் கைது செய்யப்பட்டனா். முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன்137 நபா்கள் கைது செய்யப்பட்டனா். வாகன உரிமையாளா் உரிமத்தில் உள்ள புகைப்படங்களின் உதவியுடன் 94 போ் கைது செய்யப்பட்டனா்.
சிசிடிவி காட்சிகள் எஃப்.ஆா்.எஸ்., விடியோ ஆய்வு தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன. ஜியோ- லொகேஷன் முறையில் வழக்கில் தொடா்புடையவா்களின் இருப்பிடங்கள் கண்டறியப்பட்டன. அவா்களைஅடையாளம் காண்பதற்கு டிஎன்ஏ விரல் அடையாள தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடல், வேதியல், உயிரியல், பாலிஸ்டிக் பகுப்பாய்வு முறைகள் அவா்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டன என்றாா் காவல் ஆணையா் ஸ்ரீவாஸ்தவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு

ரூ.1,60,000 சம்பளத்தில் வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!

அரசன் படப்பிடிப்பு துவங்குமா?
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

