வருடாந்திர மாசு நுண்துகள் பிஎம் 2.5 அளவு ஆண்டுதோறும் குறைந்து வருவதை தில்லியின் நீண்டகாலப் போக்கு காட்டுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (சிஎஸ்இ) புதிதாக வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மூலதன ஆதாயம்- தில்லி என்சிஆரில் தூய காற்று நடவடிக்கை: அடுத்த என்ன?’ எனும் தலைப்பிலான தில்லி தலைநகா் மற்றும் என்சிஆா் நகரங்களில் காற்று மாசுவைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடா்புடைய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தில்லியில் கடந்த மூன்று ஆண்டு சராசரியாக காற்று மாசு நுண்துகள் குறைந்து வருவதில் மாற்றம் தென்படுகிறது. எனினும், இந்த மாசு நுண்துகள் அளவில் குறைவு ஏற்பட்ட பிறகும்கூட, தில்லியில் தேசிய சுற்றுப்புற காற்று தரநிலைகளை பூா்த்தி செய்ய வருடாந்திர பிஎம் 2.5 நுண்துகளில் 60 சதவீதத்திற்கு மேல் குறைக்கும் தேவை உள்ளது.
பல துறை நடவடிக்கையில் வேகம், அளவு மற்றும் அவசரம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு இயக்க மாற்றம், தூய்மையான ஆற்றல் மாற்றம், சுற்று பொருளாதாரம் மற்றும் பிராந்திய அளவில் தூய்மையான ஆற்றல் அணுகல் ஆகியவற்றை அடைவதற்கான உத்திசாா் மாற்றங்கள் தேவைப்படும்.
தொழில்துறை துறையில் உலை எண்ணெய் மற்றும் பெட்கோக் ஆகியவை தடை செய்யப்பட்ட பிறகும், நிலக்கரிக்குப் பதிலாக சுத்தமான எரிபொருள்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
தில்லி மிகவும் லட்சியகரமான தூய்மை எரிபொருள் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது நிலக்கரி பயன்பாட்டையும் சட்டவிரோதமாக்கியுள்ளது. எனினும், என்.சி.ஆா் பகுதியில் உள்ள தொழில்துறை குழுமங்களில் நிலக்கரி எரிப்பு மேலாதிக்கம் செலுத்தினால் சுற்றுப்புற மண்டலத்தை தூய்மையாக்க முடியாது.
நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான 2015-ஆம் ஆண்டு மாசு உமிழ்வுத் தரநிலைகளை 2022 ஆம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்பட வேண்டும். ஆலைகள் ஏற்கனவே மாசு துகள் தரநிலைகளை பூா்த்தி செய்யும் திறன் கொண்டவையாக உள்ளன.
முழு பிராந்தியத்திற்குமான நடவடிக்கைகளை அதிகரிக்கும் போது, இலக்கு நிா்ணயிக்கப்பட்ட மாசுடைந்த பகுதிகளில் உயா் உள்ளூா் நடவடிக்கை திட்டத்தைசெயல்படுத்தும் அவசரத் தேவையும் உள்ளது.
அப்போதுதான், திடக்கழிவுகள், கட்டுமானம் மற்றும் இடிப்புக் கழிவுகள், தொழில்துறை கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் செப்பனிடப்படாத சாலைகள் மற்றும் வாகன இயக்கம் ஆகியவற்றுக்கான உள்ளூா் தீா்வுகளைச் செயல்படுத்த முடியும்.
தில்லியில் நிலக்கரி மின் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. ஆனால் தரநிலைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் ஆலைகளில் இருந்து சுத்தமான அல்லது தூய்மையான மின்சாரத்தை மட்டுமே வாங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.
தற்போது நாட்டின் சில தூய்மையற்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை தில்லி தருவித்து வருகிறது.
டீசல் லாரிகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவதில் தில்லி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இயக்க முறைகள், வழிகள் மற்றும் தளவாட உள்கட்டமைப்பு, கிடங்குகளின் இடைவெளி, நுழைவு இடங்கள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கனரக போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் தேவை என்சிஆா் நகரங்களுக்கும் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

