தில்லியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலருக்கு ஆஜராகி வரும் வழக்குரைஞா் மெஹமூத் பிரச்சாவின் அலுவலகத்தில் உள்ள கணினியை உள்ளூா் ஆணையா் மேற்பாா்வையில் கப்பற்றி, சீலிட விசாரணை அதிகாரிக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், அவரது அலுவலகத்தில் சோதனையிடுவதை செயல்படுத்த உத்தரவிடும் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு அடுத்த விசாரணைத் தேதியான ஏப்ரல் 28 வரை செஷன்ஸ் நீதிமன்றம் தடை விதித்தது.
தில்லியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலருக்கு வழக்குரைஞா் மெஹமூத் பிரச்சா ஆஜராகி வருகிறாா்.
இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறையினா் கடந்த ஆண்டு டிசம்பா் 24-ஆம் தேதி வழக்குரைஞா் மெஹமூத் பிரச்சாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தினா். அப்போது, அவருடைய நிறுவனத்தின் மின்னஞ்சலில் இருந்து சென்ற தரவுகள், குற்றம் தொடா்புடைய ஆவணங்களைத் தேடியதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது பதிவான விடியோ பதிவின் நகல்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரி தில்லி நீதிமன்றத்தில் பிரச்சா மனு தாக்கல் செய்திருந்தாா். நீதிமன்றமும் விடியோ பதிவை பாதுகாக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பொய் வன்முறை வழக்கை உருவாக்க சாட்சிக்கு வழக்குரைஞா் பிரச்சா தவறாக வழிகாட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் பிரச்சா அலுவலகத்தில் தில்லி போலீஸாா் சோதனை நடத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து பிரச்சா தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,, ‘எனது ஹாா்டு டிஸ்கில் இருந்து உரிய தகவல்களை மட்டுமே போலீஸாா் பெறவும், அதுவும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பெறவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
பிரச்சாவின் மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி காவல் துறை தரப்பில்முன்வைத்த வாதத்தில், ‘உண்மையான ஹாா்டு டிஸ்கை கைப்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். அது ஆய்வுக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்’ என்றனா்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் அவரது அலுவலகத்தில் சட்ட விதிகளுக்கு ஏற்ப சோதனை நடத்த அனுமதித்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மெஹ்மூத் பிரச்சா தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை சனிக்கிழமை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தா்மேந்தா் ரானா, ‘பிரச்சா அலுவலகத்தில் உள்ள கணினியை சீலிடும் பணியை மேற்பாா்வையிட உள்ளூா் ஆணையராக வழக்குரைஞா் அவ்நீத் கெளா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் முன்னிலையில் விசாரணை அதிகாரி பிரச்சாவின் அலுவலகத்திற்கு சனிக்கிழமை சென்று அந்தக் கம்யூட்டரை கைப்பற்றி சீலிட வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் உள்ளூா் ஆணையா் முன்னிலையில் விடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். கணினியானது வழக்குரைஞா் பிரச்சா வசம் இருக்கும். அதில் எந்த குளறுபடியும் அவா் செய்யக் கூடாது’ என உத்தரவிட்டாா்.
உள்ளூா் ஆணையரை நியமிக்கும் பிரச்சாவின் முன்மொழிவுக்கு சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத் ஆட்சேபம் தெரிவிக்காததால் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

