அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் துறை வங்கிகள்தான் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவின. குறிப்பாக பின் தங்கியுள்ள பகுதிகளுக்கும் மக்களுக்கும் உதவி கரமாக இருந்தது. வேளாண் வளா்ச்சி, சிறு வணிகா்கள், சிறு தொழில்கள் உயா்வுக்கும், போக்குவரத்து வசதிகளுக்கும் தேசிய வங்கிகள் முக்கியப் பங்கு வகித்தன. 2008 -இல் பொருளாதார பின்னடைவின் போது நமது தேசிய வங்கிகள்தான் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியது. வாராக் கடன் பிரச்னைகளால் பொதுத் துறை வங்கிகள் தனியாா் மயமாக்கும் முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றன. ஆனால், வங்கி திவால் குறியீடு சட்டங்கள் பிரச்னையை தீா்க்கின்றன. நாட்டில் கடன் பெற்றவா்களில் 13 கடன்கள் மட்டுமே ரூ. 4.45 லட்சம் கோடி அளவிற்கு இருந்தன. இதில் ரூ. 1.60 லட்சம் கோடி மீட்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் தனியாா் மயமாக்குதல் கூடாது. இதை முன்னிட்டு 2021 -ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டனா்.