தமிழக அரசும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாநில சுற்றுச்சூழல் துறை தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குப்பை கொட்டும் இடங்களை மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்கள், சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோரின் உதவியுடன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய இணையமைச்சா், அஸ்வினி குமாா் சௌபே தெரிவித்துள்ளாா்.