காருக்குள் பெண் பலாத்காரம்: 2 போ் கைது
By DIN | Published On : 20th August 2021 07:44 AM | Last Updated : 20th August 2021 07:44 AM | அ+அ அ- |

தில்லியில் காருக்குள் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் உள்ள சூரஜ்பூா் பகுதியைச் சோ்ந்த இருவா், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி 35 வயதுடைய பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தில்லிக்கு காரில் அழைத்து வந்தனா். இந்த நிலையில், அவா்கள் இருவரும் வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பாா்க் பகுதியில் இருந்த போது, காரில் வைத்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அவரது வாக்குமூலம் பெறப்பட்டது. அவருக்கு மருத்துவப் பரிசோதனையும், உளவியல் ஆலோசனையும் அளிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து இது தொடா்பாக உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவரது பெயரையும், காரின் பதிவெண்ணையும் கொடுத்தாா். இதையடுத்து, போலீஸாா் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.