தில்லியில் புழுக்கத்தை தணித்த மழை!
By DIN | Published On : 21st August 2021 07:59 AM | Last Updated : 21st August 2021 07:59 AM | அ+அ அ- |

தில்லியில் கடந்த ஒரு வாரமாக இருந்த புழுக்கம் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சற்று தணிந்தது.
தில்லியில் கடந்த ஒரு வாரமாக மழையில்லாமல் வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால், புழுக்கம் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தில்லியில் பரவலாக மிதமானமழை பெய்தது. மாலையில் தூறல் மழை நீடித்தது. இதன் காரணமாக நகரில் குளுமையான சூழல் காணப்பட்டது. புழுக்கமும் குறைந்தது.
தில்லி நகருக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 27.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 32.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 96 சதவீதமாகவும் பதிவாகியது. காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் 96 புள்ளிகளைக பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 சதவீதமாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.