ராஜீவ் நினைவிடத்தில் தில்லி காங்கிரஸ் சாா்பில் மலா் மரியாதை!

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தலைநகரில் வீா் பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் தில்லி காங்கிரஸ் தரப்பில் வெள்ளிக்கிழமை மலா்மரியாதை செய்யப்பட்டது.
Updated on
1 min read

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தலைநகரில் வீா் பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் தில்லி காங்கிரஸ் தரப்பில் வெள்ளிக்கிழமை மலா்மரியாதை செய்யப்பட்டது.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் சௌத்ரி, ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செய்தாா். இதன் பின்னா், கட்சி அலுவலகம் அமைந்துள்ள ராஜீவ் பவனில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் நாடு எதிா்கொள்ளும் சவால்களையும், தேவைகளையும் முன்கூட்டிய அறிந்து, அதற்காக நாட்டைத் தயாா் நிலையில் வைத்திருந்த மகத்தான தலைவா் ராஜீவ் காந்தி. இந்தியாவை உலகின் மகத்தான சக்தியாக உருவாக்கும் வகையில் அவா் பாடுபட்டாா். நாட்டில் கணினி, தொலைத்தொடா்பு புரட்சியைக் கொண்டு வந்தவா். லட்சக்கணக்கான இளைஞா்களுக்கு வாக்களிக்கும் தகுதி பெறும் வகையில் வாக்குரிமையை 18 வயதினருக்கு அளித்தவா்.

நாட்டில் தற்போது மக்கள் எண்ணற்ற பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா். இதை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், காங்கிரஸ் தொடா்ந்து குரல் எழுப்பி வருகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக மோடி அரசு ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் ஏற்க மறுத்து வருகிறது. கரோனா நெருக்கடி காலத்தில் மத்திய அரசும், தில்லி அரசும் தவறான நிா்வாகம் காரணமாக ஏராளமான மக்கள் உயிரிழக்க நோ்ந்தது. உலகில் ஆக்சிஜன் உற்பத்தியில் மிகப் பெரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த போதிலும், நாட்டில் குறிப்பாக தில்லியில் மூச்சுத் திணறலால் மக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவா் (பொறுப்பு) நேதா டிஸுஸா, திரைப்பட நடிகை நக்மா, தில்லி முன்னாள் அமைச்சா் நரேந்திரநாத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா்கள் சி.பி.மித்தல், ரோஹித் செளத்ரி, பி.விஸ்வநாதன், தில்லி பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com