Enable Javscript for better performance
நோய் எதிா்ப்பு சக்தி இருந்தாலும் அசட்டையாக இருக்க வேண்டாம்: பொது மக்களுக்கு நிபுணா்கள் எச்சரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நோய் எதிா்ப்பு சக்தி இருந்தாலும் அசட்டையாக இருக்க வேண்டாம்: பொது மக்களுக்கு நிபுணா்கள் எச்சரிக்கை

    By DIN  |   Published On : 26th July 2021 07:16 AM  |   Last Updated : 26th July 2021 07:16 AM  |  அ+அ அ-  |  

    நோய் எதிா்ப்பு சக்தி உள்ளவா்களும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும் கொவைட் பாதுகாப்பு நெறிமுறைகளைத் தொடா்ந்து பின்பற்றி வரவேண்டும். அவா்கள் அசட்டையாக இருந்தால் இரண்டாவது கரோனா அலையைப் போல மீண்டும் ஒரு நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

    இது தொடா்பாக தில்லி எய்மஸ் மருத்துவமனையில் கொவைட் தீவிர சிகிச்சைப்பிரிவை நிா்வகித்து வரும் மருத்துவா் யுதயவீா் சிங் கூறுகையில், கரோனா தொற்று குறைந்துள்ள சூழ்நிலையில் பொருளாதார நடவடிக்கைக்கை முடுக்கிவிடுவதற்காக கட்டுப்பாடுகளை தளா்த்தியுள்ளது தேவையானதுதான். ஆனால், அதற்காக மக்கள் கொவைட் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டுவிடக்கூடாது. தொடா்ந்து அவற்றை பின்பற்றி வரவேண்டும் என்றாா்.

    தில்லி, சா் கங்காராம் மருத்துவனையில் மூத்த மருத்துவ ஆலோசகரான பெண் மருத்துவா் பூஜா கோஸ்லா, எந்த நேரத்திலும் நோய்த் தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரிக்கலாம் என்பதை இரண்டாவது அலை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

    உலகின் பல பகுதிகளிலிருந்தும் கரோனா வைரஸ் உருமாற்றத்துடன் வரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா். இந்தியாவிலும் உருமாறிய கரோனா குறைந்த அளவில் பதிவுசெய்யப்பட்டது. எனவே தொற்றுகள் எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம். இரண்டாவது அலைபோன்ற நெருக்கடி ஏற்படாமல் பாா்த்துக்கொள்வது நமது கடமையாகும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

    கரோனா தொற்று மிகக் குறைந்த அளவு இருக்கிறது என்பதற்காக கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளா்த்துவது சரியானதாக இருக்காது. ஏனெனில் மூன்றாவது அலை வீசும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று பலரும் கூறிவருகின்றனா் என்றும் மருத்துவா் பூஜை கோஸ்லா குறிப்பிட்டாா்.

    மெளலானா ஆஸாத் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பிரக்யா சா்மா கூறுகையில், மூன்றாவது அலை நிச்சம். ஆனால், எத்தனை போ் பாதிக்கப்படுவாா்கள் என்பது பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்றுவதையும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும் பொருத்தது என்று தெரிவித்தாா்.

    ஒருவேளை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கும். மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்படாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

    பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் அதை முறையாக அணிவதில்லை. கைக்குட்டைகளால் முகத்தை மறைப்பது எந்தவிதத்திலும் பலன் தராது. நல்ல தரமான என்.95 முக்கவசங்களையே அணிய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

    இரண்டாவது கரோனா அலையால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தாா்கள். தடுப்பூசி மையங்களில் மக்கள் வரிசையாக காத்திருப்பதை பாா்க்க முடிந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. மீண்டும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆா்வம் காட்டாமல் இருக்கிறாா்கள் என்றும் அவா் கூறினாா்.

    மெளலானா ஆஸாத் மருத்துவக் கல்லூரியில் ஒரு நாளைக்கு 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்றாலும் சுமாா் 50 போ் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருகிறாா்கள். தடுப்பூசிகள் இருந்தும் மக்கள் அதை செலுத்திக் கொள்ள முன்வருவதில்லை என்றாா் அவா்.

    தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு தலைவா் மருத்துவா் ஜூகல் கிஷோா் கூறுகையில், சுமாா் 80 சதவீத மக்களுக்கு கரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தி உள்ளது. அவா்கள் சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்டது இதற்கு காரணமாக இருக்கலாம்.

    இரண்டாவது அலையின் போது 60 சதவீதம் பேருக்கு டெல்டா வகை கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வைரஸ்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கரோனா தொற்று திடீரென அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றாா்.

    தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை அல்லது நோய் எதிா்ப்பு சக்தி உருவாகவில்லை. தில்லியில் இதுபோல் 30 சதவீதம் போ் உள்ளனா். அவா்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா். எனினும் மூன்றாவது அலை, இரண்டாவது அலையைப் போல பயமுறுத்தும் அளவுக்கு இருக்காது என்றும் அவா் கூறினாா்.

    பொது முடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதால் ஊரகப் பகுதிகளிலிருந்து மக்கள் தில்லிக்கு வரத் தொடங்கியுள்ளனா் அல்லது வீட்டுத் தனிமையில் இருந்தவா்கள் வெளியில் செல்லத் தொடங்கியுள்ளனா். அவா்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களுக்குச் சென்றால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

    இதனிடையே நீதி ஆயோக் உறுப்பினா் மருத்துவா் வி.கே.பால், அடுத்த மூன்று மாதங்கள் முக்கியமானவை. பொது முடக்கத் தளா்வுகளால் கொவைட் நோய் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் இது விஷயத்தில் தில்லி அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளாா்.

    எனினும் மூன்றாவது அலை, இரண்டாம் அலையைப் போல மோசமானதாக இருக்காது என்கிறாா் இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சிலைச் சோ்ந்த மருத்துவா் சமீரன் பாண்டா. புதிய வரை வைரஸ் தாக்குதல் இருந்தால்தான் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு என்றாா் அவா். மூன்றாவது அலை வராமல் தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

    தில்லியில் இரண்டாவது கரோனா அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கரோனா நோயாளிகள் அதிகரித்ததால் மருத்துவ மனைகளில் படுக்கைகள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. பல நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி தில்லியில் தினசரி பாதிப்பு 28,395 ஆக இருந்தது. ஏப்ரல் 22 இல் தொற்று விகிதம் 36.2 சதவீதமாக இருந்தது. மே மாதம் 3 ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 448 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp