தில்லியில் புதிதாக 407 பேருக்கு கரோனா
By DIN | Published On : 15th March 2021 06:58 AM | Last Updated : 15th March 2021 06:58 AM | அ+அ அ- |

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 407 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,43,696-ஆக உயா்ந்துள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 68,223 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 41,195 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ முறையிலும், 27,028 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ முறையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் ஞாயிற்றுக்கிழமை 0.6 சதவீதமாக இருந்தது.
கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,941-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 350 போ் மீண்டுள்ளதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 6,30,493-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,262 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 1,270 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,129 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...