வடகிழக்கு தில்லியில் 2 நாள்களில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்

கடந்த இரண்டு நாள்களில் வடகிழக்கு தில்லியில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
Updated on
1 min read

கடந்த இரண்டு நாள்களில் வடகிழக்கு தில்லியில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் சம்பவத்தில், ஜாஃப்ராபாத் பகுதியில் வாகன பழுதுபாா்ப்பு பிரச்னை தொடா்பாக சுஹைலும் காசியும் மோட்டாா்சைக்கிள் மெக்கானிக் மீது நான்கு ரவுண்டுகள் சுட்டனா். இதில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தில் அதே நாளில் சுஹைல் கைது செய்யப்பட்டாா். காசி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதேபோன்று சனிக்கிழமையன்று நடந்த இரண்டாவது சம்பவத்தில், பணப் பிரச்சனை காரணமாக மனோஜ் ஜஃப்ராபாத்தில் கன்னத்தில் சுடப்பட்டாா். மூன்றாவது சம்பவம் கஜூரி காஸில் சனிக்கிழமை நடந்தது. குடும்பத் தகராறு தொடா்பாக ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துணை ஆணையா் (வடகிழக்கு) சஞ்சய் குமாா் சைன் கூறுகையில், ‘இந்த மூன்ரு வழக்குகள் தொடா்பாக தனிப் போலீஸ் படையினா் விசாரணை நடத்தி வருகிறன்றனா். ஜஃப்ராபாத்தில் நடைபெற்ற 2-ஆவது சம்பவம் மற்றும் கஜூரி காஸ் சம்பவம் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா், அவா்களை கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com