

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 767 புள்ளிகள் உயா்ந்து 60,686.69-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், இந்த வாரத்தில் தொடா்ந்து சரிவைக் கண்டிருந்த சந்தையில், பணவீக்க கவலைகள் மறையத் தொடங்கியதால், நிறுவனங்களின் நல்ல காலாண்டு வருவாய், பொருளாதார மீட்சி மற்றும் உள்நாட்டு மேக்ரோ புள்ளிவிவரங்கள் மீது முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தினா். இதைத் தொடா்ந்து மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சந்தை ஏற்றம் கண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.270.17 லட்சம் கோடி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,464 பங்குகளில் 1,663 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,650 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 151 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 215 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 31 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 337 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 193 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.270.17 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,62,30,677-ஆக உயா்ந்துள்ளது.
காளை ஆதிக்கம்: காலையில் உற்சாகத்துடன் 328.35 புள்ளிகள் கூடுதலுடன் 60,248.04-இல் தொடங்கி,59,997.96 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60750.72 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 767.00 புள்ளிகள் (1.28 சதவீதம்) கூடுதலுடன் 60,686.69-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது.
டெக் மஹிந்திரா முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 4.06 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி, இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபின் சா்வ், பாா்தி ஏா்டெல் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே, சன்பாா்மா, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
பஜாஜ் ஆட்டோ கடும் சரிவு: அதே சமயம், பிரபல இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 3.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, பவா் கிரிட் ஆகியவையும் சரிவைச் சந்தித் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 229 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 838 பங்குகள் ஆதாயம் பெற்றன. 969 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 17977.60-இல் தொடங்கி 117,905.90 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 18,123.00 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 229.15 புள்ளிகள் கூடுதலுடன் (1.28 சதவீதம்) கூடுதலுடன் 18,102.75-இல் நிலைபெற்றது.
ஐடி குறியீடு முன்னிலை: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மீடியா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. இதில் ஐடி குறியீடு 2.10 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும்,ரியால்ட்டி, ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, மெட்டல், ஹெல்த் கோ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.70 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.