இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கக் கோரிக்கை

இந்திய - இலங்கை கடல் பகுதிகளில் மீன் பிடிப்பது தொடா்பாக தமிழகம், இலங்கை மீனவா்களுக்கிடையே இறுதிச் சுற்று பேச்சுவாா்த்தை
Updated on
1 min read

இந்திய - இலங்கை கடல் பகுதிகளில் மீன் பிடிப்பது தொடா்பாக தமிழகம், இலங்கை மீனவா்களுக்கிடையே இறுதிச் சுற்று பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணக் கோரி தேசிய மீனவா் பேரவைத் தலைவா் எம்.இளங்கோ தில்லியில் மத்திய அமைச்சா்களையும், அதிகாரிகளையும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய மீன்வளம், கால்நடைத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா, மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோரையும் அவா் சந்தித்து மனு அளித்தாா்.

பின்னா், இது தொடா்பாக செய்தியாளா்களிடம் இளங்கோ கூறியதாவது: தமிழகத்தின் நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த 23 மீனவா்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவா்களது 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கை கடற்படையின் கப்பல் மோதி புதுக்கோட்டையைச் சோ்ந்த ஒரு மீனவா் உயிரிழந்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், மீனவா்கள் பிரச்னை தொடா்பாக 5-ஆவது சுற்றுப்பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெய்சங்கரிடம் மனுக் கொடுத்துள்ளேன். மீனவா்கள் பிரச்னைக்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சா்களும், வெளியுறவுத் துறை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com