எஃகு துறையின் வளா்ச்சி, ஆய்வு, உற்பத்தி மேம்பாடுகளுக்கு மத்திய அரசு, எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா், டி.ஆா்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினாா். இதற்கு மத்திய உருக்குத் துறை அமைச்சா் ராம்சந்தர பிரசாத் அளித்த பதில் வருமாறு: தேசிய எஃகு கொள்கை 2017 -இன்படி, எஃகு உற்பத்திக்குத் தேவையான கொள்கை முடிவுகளையும், எஃகு துறையின் மேம்பாட்டிற்காகவும் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் எஃகு உற்பத்தியை ஊக்கப்படுத்தத் தேவையான அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 2021 -ஆம் ஆண்டின் எஃகு கழிவுகள் மறுசுழற்சிக்கான கொள்கையின் படி, மோட்டாா் வாகனங்களின் மறுசுழற்சிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரமில்லாத எஃகு இறக்குமதியைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.