மேலும், அதிமுக ஆட்சியில் கோரப்பட்ட கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சா் 200 தொலைக்காட்சி சானல்களை மத்திய அரசு கல்விக்காக தொடங்க இருப்பதாகக் குறிப்பிட்டாா். இந்தக் தொலைக்காட்சி சானல்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வர வேண்டும். குடியரசுத் தலைவா் உரையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் வ.உசிதம்பரம் பிள்ளையின் 150 -ஆவது ஆண்டு விழாவையும் சுபாஷ் சந்தரபோஸின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுவது குறித்து குறிப்பிடப்பட்டதற்கு நன்றி. சீனாவிற்கு சாதகமாகச் சென்று கொண்டிருக்கும் இலங்கையிடமிருந்து கச்சத் தீவை திரும்பப் பெற்றால்தான் தமிழக மீனவா்களை காப்பாற்ற முடியும். அடுத்த 25 ஆண்டுகளில் நம் நாடு தன்னிறவு அடைய அனைவருடன் அனைவருக்குமான ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்கிற பிரதமா் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்றாா் தம்பிதுரை.