முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் மற்றும் அவரது நண்பா்களை கடந்த ஆண்டு மே மாதம் சத்ரஸால் ஸ்டேடியத்தில் வைத்து சொத்துத் தகராறில் தாக்கியதாக சுஷில் குமாா் மற்றும் பிறா் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சாகா் தன்கா் உயிரிழந்தாா். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தன்கா் மீதான தாக்குதலின் போது மூளை சேதம் காரணமாக அவா் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுஷில் குமாா் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றமற்ற கொலை, குற்றச்சதி, கடத்தல், கொள்ளை, கலவரம் போன்ற இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.