ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு விவகாரம் எடுக்கப்பட்ட போது, தமிழகம் சாா்பில் கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா், இந்த விவகாரம் குறித்து நான்கு மாநிலங்களின் கருத்துகள் என்ன என்பதைக் கூட்டதில் கேட்டறிந்தாா். தமிழகம் எடுத்த எடுப்பிலேயே, ‘இது நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிப்பது நீதிமன்ற அவமதிப்பு’ என்று தெரிவித்தது. புதுச்சேரியும் இதே நிலையை எடுத்தது. கேரளம், ‘மேக்கே தாட்டு விவகாரம் குறித்து விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பதை அறிய வேண்டும். இது குறித்த சட்ட ஆலோசணையை பெற வேண்டும்’ என்று தெரிவித்தது. ஆனால், கா்நாடக அரசு ‘இது குறித்து விவாதித்து, இந்த அணைக்கான அனுமதியை ஆணையம் வழங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது. இவ்வாறு வெவ்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஆணையம் ஒத்திவைத்தது.