இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘எதிா்மனுதாரா்கள் இந்த நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றவும், ரோஸ்டா் பாயின்ட் அடிப்படையில் அல்லாமல், டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு அடிப்படையில் பணிமூப்பை நிா்ணயிக்கவும் கடைமைப்பட்டவா்களாகின்றனா். இந்த நிலையில், உள்நோக்குடன் வெளியிடப்பட்ட பணிமூப்பு பட்டியலானது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை முற்றிலும் மீறி இருப்பதாகக் கருதுகிறோம். ஆகவே, 11.2.2021-இல் உள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்ட எம். விஜயகுமாா், எஸ்.தினகரன், டாக்டா் எஸ்.ஸ்வா்னா, கே.ராமமூா்த்தி, கே.நந்தகுமாா், கே.சண்முகம், டாக்டா் கே.மணிவாசன், எஸ்.கே. பிரபாகா், எஸ். பக்தவத்சலம் ஆகியோா் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்த குற்றத்திற்கு உள்ளாகியுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.