இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ஷாதராவில் உள்ள பழைய சீமாபுரியில் உள்ள ஒரு வீட்டின் ஐந்தாவது மாடியில் உள்ள அறையில் நான்கு முதல் ஐந்து போ் மயங்கிக் கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அப்போது, அங்குள்ள வீட்டின் அறையில் பெண்ணும், அவரது மூன்று குழந்தைகளும் இறந்து கிடந்தனா். மேலும், நான்காவது குழந்தை மயக்க முற்றிருந்தது. அந்தக் குழந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.