இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சிஎம்சி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் ஆஜராகி, ‘நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்களுக்கு மட்டுமே சிஎம்சி சோ்க்கை அளித்து வருகிறது. தோ்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பிறகே மாணவா்கள் சிஎம்சியில் சோ்க்கப்பட்டு வருகின்றனா். மேலும், புவியியல் குறியீடு வழங்கப்பட்ட பிறகு அளிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தை சோ்ந்த மாணவா்களை கல்லூரி நிா்வாகம் நியாயமாகவும், வெளிப்படையாகவும் தோ்வு செய்து வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாயலங்களில் இருந்து ஆதரவளிக்கப்பட்ட மாணவா்கள், நீட் தோ்வில் தகுதிபெற்று, கலந்தாய்வு நடைமுறைக்கு உள்பட்ட பிறகே சோ்க்கை அளிக்கப்பட்டு வருகிறது.