தில்லி, அரசுப் பள்ளிகளில் தடுப்பூசி போடும் வேகம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அரசு ஆசிரியா்கள் கல்வியில் மட்டுமின்றி மாணவா்களுக்கு தடுப்பூசி போடுவதையும் முன்னனின்று கவனித்து வருகின்றனா். மாணவா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடுவது மூலம் இணையவழிக் கல்வியிலிருந்து நேரடி வகுப்புகளுக்கு மாற உதவும். இப்போது நோய்த் தொற்று பரவல் கணிசமாகக் குறைந்து வருவதாலும், உயா் வகுப்புகளில் உள்ள பெரும்பாலான மாணவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாலும், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஒரு முன்மொழிவை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் முன்பு வைக்கப்படும்.