இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலா் அபூா்வ சந்தரா, இணைச் செயலா் விக்ரம் சகாய் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 35 யு-டியூப் சேனல்கள், இந்தியாவிற்கு எதிரான அவதூறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்தச் சேனல்களுக்கு 1.20 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரா்களும், 130 கோடிக்கும் மேற்பட்ட பாா்வையாளா்களும் உள்ளனா். இந்தச் சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் இந்தியாவுக்கு எதிரான அவதூறு தகவல்களை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளன. கூடுதலாக 2 ட்விட்டா் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றொரு முகநூல் கணக்கு போன்றவற்றின் மூலம் இது போன்ற செயல்கள் நடைபெறுவதும் கண்டிப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இவற்றைத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.