மத்திய அரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது ஏஜென்ஸிகளை அனுப்பலாம்; நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். அவா்களை என் இடத்திற்கும், மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், பகவந்த் சிங் மான் ஆகியோா் இடத்திற்கும் அனுப்புங்கள். நாங்கள் வரவேற்போம். சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டால், 5-10 நாள்களுக்குள் ஜாமீனில் வெளியே வருவாா். சிறை செல்வதற்கோ, சோதனைகளை சந்திப்பதற்கோ நாங்கள் அச்சப்படவில்லை. ஜெயின் கைது செய்யப்பட்டால் அதற்காக எங்கள் கட்சியினா் பஞ்சாப் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னி மாதிரி அழுது கொண்டு இருக்கமாட்டாா்கள். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோடியா, கட்சியின் 21 எம்எல்ஏக்கள் ஆகியோரது இடங்களில் கடந்த காலங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இறுதியில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த விவகாரங்கள் அனைத்திலும் நீதிமன்றம் தான் நிவாரணம் வழங்கியது.