குடியரசு நாள் பாதுகாப்பு: தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை

குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிப்பதாக மெட்ரோ நிர்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த தடை
Updated on
1 min read

குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிப்பதாக மெட்ரோ நிர்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் 73வது குடியரசு நாள் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி தில்லி ராஜபாதையில் கொண்டாடப்படவுள்ளன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தில்லி மெட்ரோ நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்தியில்,

குடியரசு நாள் பாதுகாப்பின் ஒருபகுதியாக நாளை(ஜன 25) பிற்பகல் 2 மணிமுதல் ஜனவரி 26 நள்ளிரவு வரை தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com