வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த குழிகளில் சிறுத்தைகள் குடும்பம் உள்பட அழிந்து வரும் உயிரினங்கள் உள்ளன. அவற்றின் இயல்பு 1994-ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் மாறிவிட்டது. அந்தச் சுரங்கக் குழிகளிலும் அதைச் சுற்றிலும் பலவிதமான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் காணப்படுகின்றன. 1994-ஆம் ஆண்டிலும், திடக்கழிவு மேலாண்மை வசதிகளை மேம்படுத்துவதற்கு பட்டி சுரங்கங்களைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு முந்தைய மாநகராட்சி நகர அரசிடம் கோரியிருந்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை வனத் துறையும், தேசிய பசுமைத் தீா்ப்பாயமும் நிராகரித்திருந்தன. 2,166 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பட்டி சுரங்கங்களில் சுரங்கப் பணிகள் 35 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டது.