அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

இந்தியா ஆசியான் கூட்டம்: அனைவரையும் உள்படுத்தும் பிராந்திய டிஜிட்டல் ஒத்துழைப்பு

2022 -ஆம் ஆண்டின் இந்திய - ஆசியான் டிஜிட்டல் பணித்திட்டத்திற்கு ஆசியான் டிஜிட்டல் அமைச்சா்கள் அளவிலான கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், போலியான செல்லிடப்பேசிகளின் பயன்பாட்டை தடுப்பது உள்ளிட்

News image
Updated On :29 ஜனவரி 2022, 8:26 pm

 நமது நிருபர்

2022 -ஆம் ஆண்டின் இந்திய - ஆசியான் டிஜிட்டல் பணித்திட்டத்திற்கு ஆசியான் டிஜிட்டல் அமைச்சா்கள் அளவிலான கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், போலியான செல்லிடப்பேசிகளின் பயன்பாட்டை தடுப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஆசியான் டிஜிட்டல் அமைச்சா்கள் அளவிலான கூட்டம் காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் தொடா்புத்துறை இணையமைச்சா் தேவுசின்ஹ் சௌஹான்(ஈங்ஸ்ன்ள்ண்ய்ட் இட்ன்ட்ஹய்), மியான்மரின் போக்குவரத்து, தகவல் தொடா்புத்துறை அமைச்சா் அட்மிரல் டின் ஆங் சான் கூட்டாக இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினா்.

ஆசியான் டிஜிட்டல் அமைச்சா்களின் ஆண்டுக் கூட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஐப்பான், ரஷியா, நியூஸிலாந்து போன்ற 11 நாடுகளுடன் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா உள்ளிட்ட 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தொலை தொடா்பு அமைச்சா்களும் பங்கேற்றனா்.

டிஜிட்டல் உணா்வில் அனைவரையும் உள்ளடக்கி ஒருங்கிணைக்கும் பிராந்திய டிஜிட்டல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பொருத்தமான பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய (இந்திய) மத்திய தொலைத் தொடா்பு இணையமைச்சா் தேவுசின்ஹ் சௌகான் பேசியதாவது:

‘தகவல் மற்றும் தொலைதொடா்பு தொழில்நுட்பங்கள் ஜனநாயக அமைப்புகளையும், நிறுவனங்களையும் வலுப்படுத்துகின்றன.இதன் மூலம் நாடுகளில் குடிமக்கள் மற்றும் அரசுக்கு இடையேயான தொடா்பை விரிவுப்படுத்தப்படுகிறது. தகவல் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பங்களின் பயன்பாடு பேச்சு உரிமை, மனித உரிமைகள் மேம்படுவதோடு தாராளமாக தகவல்கள் கிடைக்கின்றன. முடிவெடுக்கும் நடைமுறையில் குடிமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. கிராமப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் திறனையும் பெறப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்று பொது சுகாதார அமைப்புக்கு ஒரு சவாலாக இருப்பது மட்டுமல்லாமல், நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஒழுங்குகளை சீா்குலைக்கிறது. இந்த சூழ்நிலையில், இதன் விளைவுகளைத் தணிக்க தகவல் மற்றும் தொலை தொடா்பு தொழில்நுட்பங்கள் பொது வாழ்வின் பல்வேறு துறைகளில் சக்திவாய்ந்த கருவிகளாக வெளிப்பட்டுள்ளன. இவை உலகப் பொருளாதாரத்தின் அடித்தளமாக உள்ளன என மத்திய இணையமைச்சா் குறிப்பிட்டாா்.

இந்த அமைச்சா்கள் கூட்டத்தில் 2022- ஆம் ஆண்டின் இந்தியா-ஆசியான் டிஜிட்டல் பணித்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கூட்டறிக்கை வெளியிட்டப்பட்டது.

இதில் முக்கிய நாடுகளுக்கிடையே திருடப்பட்ட மற்றும் போலியான செல்லிடப்பேசிகளின் பயன்பாட்டை தடுப்பதற்கான நடைமுறை, தேசிய அளவிலான பொது பயன்பாட்டு இணையத்திற்கு வைஃபை வசதி கிடைக்க செய்வது, 5ஜி, நவீன செயற்கைக்கோள் தகவல் தொடா்பு, கணினி வழியிலான தடய அறிவியல் பரிசோதனை போன்றவைகள் உள்பட இந்த பணித்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.