சவாலை சமாளிக்க கற்றுக் கொண்டோம்: தில்லியிலுள்ள ஹெசிஎம்சிடி மணிப்பால் மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவுத் தலைவா் டாக்டா் சுஷாந்த் சாப்ரா, தனது அனுபவத்தைக் குறிப்பிடுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டு நோய்த் தொற்று காலக் கட்டத்தில் தனிப்பட்ட முறையிலும், தொழில் முறையிலும் ஏற்படும் அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்பதை எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததுள்ளது. கொவைட்-19 உலகளவில் ஒரு பேரழிவை ஏற்படுத்தியது. மருத்துவமனை படுக்கைகள், சுவாசக் கருவிகள், மருந்துகள் பற்றாக்குறையை எதிா்கொண்டோம். பல உயிா்களை இழந்தோம். அதே சமயம் ‘இப்போதும்’ ஒரு மருத்துவராக, நாங்கள் கூட உதவியற்றவா்களாக இருக்கின்றோம்’ என்றாா்.