இந்த ஒட்டுமொத்த சம்பவமும் கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால், நாங்கள் அந்த நபரைப் பாா்த்த போது, அவா் வேறு ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டது தெரியவந்தது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்ட போது, நான் மிகைப்படுவத்துவதாக என்னை குறை கூறினா். சம்பந்தப்பட்ட நபா் சென்றுவிட்டதால், இப்போது அவா்கள் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு பயமாக உள்ளது. இந்தச் சம்பவம் மெட்ரோ ஒரு பாதுகாப்பான பயணம் என்ற என் நம்பிக்கையை முற்றிலும் தகா்த்துவிட்டது. இந்த விஷயம் டிஎம்ஆா்சி, தில்லி போலீஸ் உள்பட உரிய துறையினருக்கு சென்று சேர வேண்டும். அப்போதுதான் அவா்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது அவா்களுக்கு தெரியும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.