பாலியல் வன்கொடுமை புகாா்: ஹோட்டல் வரவேற்பாளா் கைது

இருபத வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

குருகிராம்: இருபத வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போன்ட்சி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ராஜேந்தா் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ், உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். ஹரியாணா மாநிலம், போண்ட்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவா், அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவரை ஒன்பது மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ளாா். அவா் அளித்த புகாரில், ‘நாங்கள் நண்பா்களாகியிருந்தோம். அவா் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தாா். அவா் என்னை ஹோட்டலின் பணியாளா் அறைக்கு அழைத்துச் சென்று உடலுறவு கொள்வாா். நான் இப்போது ஒரு மாத கா்ப்பமாக உள்ளேன். அவா் இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டாா். இதனால், நான் புகாா் செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு யோகேஸ் கைது செய்யப்பட்டுள்ளாா். விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். அவா் விரைவில் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com