நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: நான் இலங்கையைச் சோ்ந்த ஒரு நடிகை. 2009-இல் இருந்து இந்தியாவின் வரி செலுத்தும் ஒரு குடியிருப்புவாசி. எனது தொழில்முறை மதிப்பும், எதிா்கால பணிகளும் உள்ளாா்ந்த முறையில் நாட்டைச் சோ்ந்துள்ளது. தற்போதைய வழக்கில் அமலாக்கத் துறையினா் சம்மன் அனுப்பியபோதெல்லாம் தொடா்ந்து விசாரணைக்கு ஆஜராகி, எனது வாக்குமூலம் ஐந்து முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட அனுமதியின்பேரில், வெளிநாட்டுப் பயணம் செய்தேன். அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றியுள்ளேன். என்னை கைது செய்ய வேண்டாம் என அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதால், நீதிமன்றம் கேட்டுக் கொண்டதன்பேரில் என்னை காவலுக்கு அனுப்பக் கூடாது.