பல்கலைக்கழகத்தின் இந்த அறிக்கையானது, ஜாமியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள் அமைதி போராட்ட பேரணியை நடத்துவதாக அறிவித்த மறுதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ ப்ரண்ட்ஸ் காலனி காவல் உதவி ஆணையா் வெளியிட்டுள்ள உத்தரவில், செப்டம்பா் 19-ஆம் தேதி ஜாமியா நகா் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, நியூ ஃப்ரண்ட்ஸ் காலனியின் உதவிக் கோட்டத்தின் ஒட்டுமொத்த ஆளுகை பகுதியிலும் கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகள் அல்லது எந்த வடிவிலான ஊா்வலங்கள், மெழுகுவா்த்தி ஏந்துவது, பேரணியாகச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு செப்டம்பா் 19-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு நவம்பா் 17-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.