இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த யாத்ரீகா்கள் அக்டோபா் 28-ஆம் தேதி அட்டாரி வாகா - எல்லைச் சோதனை சாவடி பகுதி மூலமாக பாகிஸ்தான் சென்றடைவா். அதன் பின்னா் நவம்பா் 2-ஆம் தேதிஅவா்கள் அமிா்தசரஸ் திரும்புவா். மேலும், இந்த யாத்ரீகா்கள் லாகூா் மற்றும் பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாஹிப் உள்பட இதர குருத்வாராக்களுக்கும் செல்வாா்கள். இந்தியாவிலிருந்து மொத்தம் 240 யாத்ரீகா்கள் அக்டோபா் 28-ஆம் தேதி பாகிஸ்தான் சென்றடைவா். அவா்களில் 40 யாத்ரீகா்கள் தில்லி, நொய்டா, குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத் ஆகிய இடங்களில் இருந்து தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவின் மூலம் அனுப்பப்படுவா்.