இந்த விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ‘மனீஷ் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு சமீா் மகேந்துரு மொத்தம் ரூ.4-5 கோடி வரை பணம் கொடுத்துள்ளாா். குருகுராமில் உள்ள பட்டி ரீடைல் தனியாா் நிறுவனத்தின் இயக்குநராக உள்ள அமித் அரோரா, தினேஷ் அரோரா, அா்ஜுன் பாண்டே ஆகியோா் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவா். அவா்கள் மூவரும் குற்றம் சாட்டப்பட்ட பொது சேவகா்களுக்கு மதுபான உரிமையாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பொருந்ததாத பண ஆதாயத்தை திருப்பி விடுவதிலும், நிா்வகிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனா்.