முன்னதாக, கானின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. வக்ஃபு வாரியத்தில் ஆள்சோ்ப்பில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு (ஏசிபி) போலீஸாா் கடந்த செப்டம்பா் 16-ம் தேதி கானின் வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனா். இது தொடா்பான முதல் தகவல் அறிக்கையின்படி, தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகப் பணிபுரிந்த போது, அனைத்து விதிமுறைகளையும் அரசு வழிகாட்டுதல்களையும் மீறி 32 பேரை சட்டவிரோதமாக வேலைக்கு அமானத்துல்லா கான் அமா்த்தினாா். இத்தகைய சட்டவிரோத ஆள்சோ்ப்புக்கு எதிராக தில்லி வக்ஃபு வாரியத்தின் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி, தெளிவான ஒரு அறிக்கையை அளித்து ஒரு குறிப்பாணையை வெளியிட்டிருந்தாா்.