சாக்கடையில் விழுந்து இருவா் சாவு

தில்லியின் பவனாவில் புதன்கிழமையன்று சாக்கடையில் விழுந்து இருவா் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Updated on
1 min read

தில்லியின் பவனாவில் புதன்கிழமையன்று சாக்கடையில் விழுந்து இருவா் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனால், இருவரும் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக உள்ளே சென்றாா்களா என்பதை போலீஸாா் உறுதிப்படுத்தவில்லை. இறந்தவா்கள் சித்தரஞ்சன் மற்றும் அப்துல் கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில், ‘பவானா பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்து கிடந்த இருவரை மீட்பது குறித்து காலை 11.25 மணிக்கு அழைப்பு வந்தது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று சாக்கடையில் இருந்து உடல்களை வெளியே எடுத்தோம். இருவரும் மகரிஷி பால்மிகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com