தில்லியில் தெற்கு எக்ஸ்டென்ஸன் பகுதி 2-இல் உள்ள உணவகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: சம்பந்தப்பட்ட உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக புதன்கிழமை 12.45 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தீப்பற்றிய உணவகம் அருகே பெட்ரோல் பம்ப் அமைந்துள்ளது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வரவில்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.