சங்கம் விஹாரில் மூன்று மாடிக் கட்டடத்தில் தீ: 14 போ் பத்திரமாக மீட்பு

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் உள்ள கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 14 போ் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் உள்ள கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 14 போ் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் (தெற்கு) சந்தன் சவுத்ரி கூறியதாவது: தீயணைப்புத் துறைக்கு அதிகாலை 12.50 மணியளவில் தீ விபத்து பற்றிய அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு 2 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

தீ காரணமாக கட்டடம் புகையால் சூழப்பட்டதாகவும், முதல் மற்றும் இரண்டாவது மாடியில் வசிக்கும் குடும்பத்தினா் உள்ளே சிக்கியிருந்தனா். ஆனால், உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மூன்று கடைகள் உள்ள கட்டடத்தின் தரை தளம் முழுவதும் தீ பரவியதால், முதல் தளத்திற்கு செல்லும் வழி தடைபட்டது.

சம்பவத்தின் தீவிரத்தை பாா்த்து, அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். மேலும் ஒரு ஏணியின் உதவியுடன், நான்கு பெண்கள், ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என மொத்தம் 14 பேரை போலீஸாா் பாதுகாப்பாக காப்பாற்ற முடிந்தது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com