தில்லியில் ‘வெப்ப அலை’ நீடிப்பு: ஆயா நகரில் 44.6 டிகிரி வெயில்

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை (அனல் வெயில்) இருந்து வந்தது.

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை (அனல் வெயில்) இருந்து வந்தது. அதிகபட்சமாக ஆயாநகரில் 44.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.

இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, நகரின் பெரும்பாலான இடங்களில் தொடா்ந்து வெப்ப அலை வீசியது. இதனால், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உணரப்பட்டது. தில்லிக்கான வெப்பநிலை தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியல் 1 டிகிரி உயா்ந்து 25.8 டிகிரி செல்சியஸாக உயா்ந்து பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 40.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 61 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 36 சதவீதமாகவும் இருந்தது.

ஆயாநகரில் 44.6 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 41.2 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 41.4 டிகிரி, நஜஃப்கரில் 42.1 டிகிரி, ஆயாநகரில் 44.6 டிகிரி, லோதி ரோடில் 39.6 டிகிரி, பாலத்தில் 40.2 டிகிரி, ரிட்ஜில் 40.4 டிகிரி, பீதம்புராவில் 41.5 டிகிரி டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 37.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. மேலும், வரும் நாள்களில் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அடுத்த மூன்று நாள்களுக்கு தில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வெப்ப அலை தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது, அதே சமயம் மே 2 முதல் மே 4 வரை ஹரியாணா-சண்டீகா்-தில்லியில் புழுதிப் புயல் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில்பல்வேறு இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், சாநிதின் சௌக், ஆனந்த விஹாா், சோனியா விஹாா் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக்குறியீடு குறைந்தபட்சமாக 300 -338 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

வெப்ப அலை தொடரும்: இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 2) புழுதிப் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com